Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நமது மாவட்டத்தில் திருட்டினை தடுக்க வணிகர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் பாதுகாப்பு கருதி மூன்று பூட்டுகளை பயன்படுத்திட வேண்டும்.
இதில் சென்ட்ரல் லாக் மிக அவசியம். எக்காரணம் கொண்டும் கடைகளில் பணத்தினை வைத்து செல்ல வேண்டாம். அதிகப்படியான சரக்குகளை வைத்துள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு இயலாத சிறு வணிகர்கள் கூட்டாக இணைந்து இரவு காவலர்களை நியமிக்க வேண்டுகிறோம். இயன்றவரை சிசிடிவி கேமராக்கள் பொறுத்திட பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது. மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டுகிறோம்.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து இந்த தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடிட நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில கேட்டுக் கொள்கிறோம்.